செய்திகள் :

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

post image

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில்,

ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடரும், ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, கேரளத்திலும், தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 11 செ.மீ. ஆனால் 27 செ.மீ மழை பெய்துள்ளது. எனவே மார்ச் முதல் தற்போது வரை தமிழகத்தில் இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ரத்தினகிரியில் நிலைகொண்டுள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இன்று நெல்லை,தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளையும் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை தொடரும்.

நீலகிரி, கோவையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே தூத்துக்குடி, பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு 3ம், மற்ற துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1-ம் ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84) காலமானார்.இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர்... மேலும் பார்க்க

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களில் ரூ. 1 கோடிக்கு அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இரு... மேலும் பார்க்க

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர... மேலும் பார்க்க