செய்திகள் :

தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு

post image

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க