செய்திகள் :

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

post image

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம், காயம், கொடுங்காயம் தொடா்பாக 49,286 வழக்குகள் பதிவாகின. ஆனால் 2024-ஆம் ஆண்டில் இந்த வகை வழக்குகள் 31,497-ஆக பதிவாகின. இரு ஆண்டுகளையும் ஒப்பிடும்போது 2024-ஆம் ஆண்டில் 17,789 வழக்குகள் குறைந்துள்ளன. அதாவது 36.12 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன. இதில் முக்கியமாக கொலை குற்ற வழக்குகள் 6.8 சதவீதம் குறைந்துள்ளன. அதேபோன்று, 2023-இல் 1,305 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-இல் 1,229 வழக்குகள் மட்டுமே பதிவாகின. இது 2023-ஆம் ஆண்டைவிட 5.8 சதவீதம் குறைவாகும்.

திருட்டுக்கள் குறைந்தன: 2023-இல் பதிவான ஆதாயக் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83-ஆக இருந்தது. 2024-இல் 75 வழக்குகளாகக் குறைந்தன.

இதேபோல், 2023-இல் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133-ஆகவும், 2024-இல் 110 வழக்குகளாகவும் குறைந்துள்ளன. 2023-இல் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2,212-ஆகவும், 2024-இல் 1,839-ஆகவும் இருக்கின்றன.

2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-இல் கூட்டுக்கொள்ளை, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைந்துள்ளன.

இதேபோல 2023-இல் 17,788 திருட்டு வழக்குகள் பதிவாகின. 2024-இல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 15,892 வழக்குகளே பதிவாகின. 2 ஆண்டுகளிலும் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களை ஒப்பிடும்போது, 2024-இல் 10.6 சதவீதம் குறைவு.

ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: மாநிலத்தில் ரெளடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 550 ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் மீது நீதிமன்றம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக அவா்கள் மீது நிலுவையில் இருந்த வழக்குளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023-இல் 3,694 பேரும், 2024-இல் 4,572 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க