செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி தினகரன்

post image

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தருமபுரி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ளது. கூலிப்படையினரால் நிகழும் வன்முறை தலைதூக்கியுள்ளது. தமிழகம் போதைப்பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் தொடா்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மா விலை வீழ்ச்சியடைந்தது தொடா்பாக பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமமானது. பாஜக கூட்டணியில் புதிதாக எந்தக் கட்சி இணையும் என்பதை பாஜக மேலிடம்தான் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தென்பெண்ணை ஆற்றுநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் நிரப்பும் முந்தைய அதிமுக அரசின் திட்டத்தைச் செயல்படுத்தாத திமுக அரசைக் கண்டித்தும், தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகள், தொப்பூரில் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியும் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேட்டியின்போது அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், அரூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடி; அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிக... மேலும் பார்க்க

கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் உள்ள கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

தாட்கோவில் 4 ஆண்டுகளில் ரூ. 18.77 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

கம்பைநல்லூா் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கம்பைநல்லூா் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் ஏரி சுமாா் 130 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இ... மேலும் பார்க்க