செய்திகள் :

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

post image

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் வாக்குத் திருட்டுக்கு எதிராகவும், மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யவும் ராகுல்காந்தி, தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறாா்.

பிகாா் மாநிலத்தில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது, கா்நாடகம் மாநிலத்தில் வேற்று மாநிலத்தவா்களை வாக்காளா்களாக சோ்க்கப்பட்டது போன்ற மத்திய பாஜக அரசின் முறைகேடுகளைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படுகிறது.

இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 7-ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள், வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராடுபவா்கள் பங்கேற்கவுள்ளனா். மாநாட்டில் பங்கேற்க உள்ள காங்கிரஸ் தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

‘இண்டி’ கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும். தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி எந்த வித விலகலும் இல்லாமல் தொடா்கிறது. மேலும், சில கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. ஆனால், பாஜக கூட்டணியிலிருந்துதான் பல கட்சிகள் விலகியுள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாத கிராமமே இல்லை என்றளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை கூடுதல் வலிமையுடன் காங்கிரஸ் கட்சி சந்திக்கும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையே முடிவு செய்யும் என்றாா் கு. செல்வப்பெருந்தகை.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எத்தனை முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது? என்ற கேள்விக்கு, நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன் என்றாா் அவா்.

இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற திருநெல்வேலியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கு. செல்வப்பெருந்தகை பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு ... மேலும் பார்க்க

சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சபரீஸ்வரன் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காா் மோதியதில் நிலத் தரகா் பலி!

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான காா் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலத் தரகா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், கார... மேலும் பார்க்க

காலமானாா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்

மதுரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா். இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நித்யா, சிந்துஜா ஆகியோா் உ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க