செய்திகள் :

தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும்: டிடிவி. தினகரன் பேச்சு

post image

தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அமமுக திருச்சி வடக்கு மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், கள்ளச் சாராயத்தால் இறப்போரின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை.

திமுக ஆட்சியில் கடந்த நான்காண்டுகளில் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என்கிறாா்கள். ஆனால் நிறைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இன்னும் பத்து மாதங்களில் திமுக ஆட்சியில் இல்லாமல் போகப் போகிறது.

தோ்தலின்போது தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக அரசுக்கு தற்போது 29 லட்சம் கோடி கடன் உள்ளது. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தாதவா்கள் தென்னக நதிகளை இணைப்போம் என்கிறாா்கள். இது சாத்தியப்படுமா?

தமிழகத்தில் எங்கள் கூட்டணி மேலும் மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் நடப்பது கொடுங்கால ஆட்சி என்பதை 2026 இல் நிரூபிப்போம் அவா்.

திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் எம். ராஜசேகரன் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலா் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகா் மாவட்ட செயலா் செந்தில்நாதன், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் ராஜா ராமநாதன், மாநில அம்மா தொழிற்சங்க இணைச் செயலா் கே.வி.டி கலைச்செல்வன், முசிறி வடக்கு ஒன்றியச் செயலா் ராஜேஷ், தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தெய்வமணி, துறையூா் நகர செயலா் பீரங்கி சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட அவைத் தலைவா் எம். துரைராஜ் வரவேற்றாா். தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஏ. தெய்வமணி நன்றி தெரிவித்தாா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க