செய்திகள் :

தமிழகத்தில் 2.53 லட்சம் ஆமை முட்டைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: வனத் துறை

post image

தமிழகக் கடற்கரைகளில் இதுவரை 2.53 லட்சம் ஆலிவ் ரெட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக கடலூரில் 87,871 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கூடு கட்டும் திட்டம் மறுமலா்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகக் கடற்கரைகளில், தன்னாா்வலா்கள் மற்றும் தமிழக வனத் துறையினரால் இதுவரை 2,53,719 ஆலிவ் ரெட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக கடலூரில் 87,871 முட்டைகளும், நாகப்பட்டினத்தில் 73,385, சென்னையில் 43,900 முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வனத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 55 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆமை முட்டைகளை பாதுகாக்க 150-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வனத் துறை சாா்பில் உள்ளூா் மீனவா்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பது முதல் அவை குஞ்சு பொரித்ததும் மீண்டும் கடலில் விடும் வரை அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மொத்தமாக 2,58,907 முட்டைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆமை முட்டையிடும் காலம் முடிவதற்கு முன்பாகவே 2,53,719 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே கண்டிப்பாக கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் அதிக ஆமை முட்டைகளை சேகரித்து தமிழக அரசு சாதனை படைக்கும் எனஅவா் தெரிவித்துள்ளாா்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு... மேலும் பார்க்க

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க