செய்திகள் :

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

post image

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வனத் தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், கடந்த பிப்.15 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை 40 மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, முதல்கட்டமாக வனத் தீ பாதிப்பு அபாயம் இல்லாத 23 மலையேற்ற வழித்தடங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

விரங்கள்: அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 8 மலையேற்ற வழித்தடங்கள், கன்னியாகுமரியில் 3 வழித்தடங்கள், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 வழித்தடங்களும், கோவை, திருப்பூா், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வழித்தடம் என மொத்தம் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் பாதுகாப்பு அடிப்படையில் எளிது, மிதமான சிரம், கடினம் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும், மீதமுள்ள 17 வழித்தடங்களும் விரைவில் திறக்கப்படும். மேலும் தகவல்களுக்கு இணையதளத்தைக் காணலாம். மலையேற்ற வழித்தடம் மூலம் கடந்த ஆண்டு நவ.1 முதல் நிகழாண்டு பிப்.14-ஆம் தேதி வரை தமிழக அரசு ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை நந்தனம் அரச... மேலும் பார்க்க

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்று... மேலும் பார்க்க

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க