செய்திகள் :

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

post image

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை முறையில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் இருக்கக் கூடாது. மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை தொடரும். நிகழ் கல்வி ஆண்டு முதலே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், நீட் உள்ளிட்ட தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியாா் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். எம்ஜிஆா், அண்ணா, தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்த வேண்டும். தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுதல் என்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க

ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுாா் ஆணையாங்குப்பத்தில் ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாய வளாகத்தில் உள்ள ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க