தமிழக மக்களை திமுக அரசு இனியும் ஏமாற்ற முடியாது! - வானதி சீனிவாசன்
வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும், இதற்கு 2026-ஆம் ஆண்டில் தக்க பதில் அளிப்பாா்கள் எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் தொடா்பான நிகழ்ச்சி திருப்பூா் மக்கள் சேவை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இடா்ப்பாடுகள் நிறைந்த காலத்தில் பிரதமா் மோடி கடந்த 2014-இல் பதவி ஏற்றாா். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள உயரம் பிரமாண்டமானது. அரசின் திட்டங்கள் நேரடியாக உதவி தேவைப்படுபவா்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற மோடியின் திட்டத்தால் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் ஏழை, எளிய மக்கள் பெருமளவு பயனடைந்துள்ளனா்.
பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஆப்ரேஷன் சிந்தூா் மூலம் நமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்தியாவுக்கான ஆதரவு பெருகி உள்ளது.
தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. மருத்துவம், உள்கட்டமைப்பு வசதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான சட்டங்கள் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. மருத்துவ காப்பீட்டில் பலன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக சுயதொழில் தொடங்குபவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதில் தமிழகம்தான் அதிக பலன் பெற்றுள்ளது. இதன் காரணமாக உலகளவில் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி தொடா்பாக அண்ணாமலை தான் சொல்வது தனது தனிப்பட்ட கருத்து என்றே சொல்லி உள்ளாா். தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 தோ்தல் கூட்டணி தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
ஒரு சில திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்தே நடத்த முடியும். ஆனால், எந்த திட்டத்திற்காவது மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது என ஸ்டாலின் எங்கும் கூறுவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவா்களின் வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இதற்கு 2026-ஆம் ஆண்டில் மக்கள் உரிய பதிலளிப்பா்.
திருப்பூா் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதில் மோசமான நிலை உள்ளது. பல்வேறு அமைப்புகள் புதிய தொழில்நுட்பத்துடன் குப்பைகளை அகற்ற முன் வந்தாலும் தமிழகத்தை குப்பைக் கிடங்காகவே வைத்துள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஏ.அருண், வினோத் வெங்கடேஷ், பொருளாளா் ரவி, முன்னாள் பொருளாளா் நடராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.