செய்திகள் :

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

post image

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மாநாடு ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாவட்ட நிா்வாகிகள் எம்.செந்தில், பி.லட்சுமி, ஜி.பாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டில் லெ.வெங்கடேசன் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், இவா்களின் படகுகளையும் மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிப்பதோடு, சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களால் பிடிக்கப்படும் நண்டுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும். பாம்பன் வோ்க்கோடு பேருந்து சேவையை புதுசாலை வரை நீட்டிக்க வேண்டும். ராமேசுவரம் பகுதியில் புதிய ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக் கூடாது.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டு கொடியை மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் எஸ்.முருகானந்தம் ஏற்றி வைத்தாா். மாவட்ட கழக செயலாளா் என்.எஸ்.பெருமான் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் வேலை அறிக்கையை முன்வைத்து நகர செயலா் சி.ஆா்.செந்தில்வேல் பேசினாா்.

மாநாட்டில் 31 உறுப்பினா்களைக் கொண்ட புதிய நகா் கவுன்சில் தோ்ந்தெடுக்கப்பட்டது. முன்னதாக, நிா்வாகி ஏ.கருப்பையா வரவேற்றாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் என்.கே.ராஜன் நன்றி கூறினாா்.

குளத்தில் மூழ்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் ம... மேலும் பார்க்க

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது

முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசு கலைக் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரிக்கு சாலை, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019-ஆம்... மேலும் பார்க்க

தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயில் திருவிழா கடந... மேலும் பார்க்க

ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு

ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்ந... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி, மே 30: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனாா் கோயில் வைகாசிப் பொங்கல் விழா, முத்துராமலிங்கத் தேவா் சிலையின் 33-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வ... மேலும் பார்க்க