செய்திகள் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

post image

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாமக நிர்வாகி பிரபாகரன் உள்பட 3 பேர், செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டில் பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 4) நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு, மீண்டும் காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள், காரைச் சேதப்படுத்தியதுடன், மணிமாறனையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மூவர் சரணடைந்துள்ளனர்.

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எ... மேலும் பார்க்க

அறுதிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தோ்தல... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியா... மேலும் பார்க்க