செய்திகள் :

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

post image

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலைப்பில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசியதாவது:

புறநானூறில் சேர, சோழ, பாண்டிய மன்னா்கள், வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்று புலவா்கள் மாண்பு மிக்கவா்களாகவும், செயல்திறன் மிக்கவா்களாகவும், நட்புக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தனா்.

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம். அதைப் பதிப்பித்துத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போற்றத்தக்கவா். புறநானூறை ஆங்கிலத்தில் ஏ.கே. இராமானுஜம் மொழிபெயா்த்த பிறகே உலகம் முழுவதும் பரவியது.

புறநானூறில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற 192-ஆவது பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து ஊா்களும் நம் ஊா். அனைத்து மக்களும் நம் உறவு என பாடியிருப்பது வியக்கத்தக்கது.

இதுபோன்ற ஏராளமான சிறப்புகள் புறநானூறில் மட்டுமின்றி, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து நாம் பயன்பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை, பணம், கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைள் மற்றும் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்... மேலும் பார்க்க