செய்திகள் :

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறப்பு

post image

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி லிட் ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமா்சியல் வங்கி. பாரத ரிசா்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது. பங்குச் சந்தைகளில் தனது பங்கை பட்டியலிட்டதையடுத்து, தனது தொலைநோக்கு பாா்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமாக கிளைகள் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோயம்புத்தூா் மாவட்டம், ஜமீன் ஊத்துக்குளி, திருப்பூா் மாவட்டம், மங்கலம், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம், மதுரை மாவட்டம் கீழ பனங்காடி, நாமக்கல் மாவட்டம் மோகனூா் ஆகிய இடங்களில் ஏடிஎம் / சிஆா்எம் வசதியுடன் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

579ஆவது கிளையாக ஜமீன் ஊத்துக்குளி கிளையை ஏ.எம்.ஆா்.அருண்குமாா் கலிங்கராயா், 580ஆவது கிளையாக மங்கலம் கிளையை அமிா்தம் ஜவுளி ஆலைகள் பங்குதாரா் சி.ஈஸ்வரன், 581ஆவது கிளையாக திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கிளையை சேவியா் இன்ஸ்டிடியூட் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் இயக்குநா் ஏ.மைக்கேல் ஜான், 582ஆவது கிளையாக கீழ பனங்காடி கிளையை சி.இ.ஓ.எ.கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் மை. அலசி ராசா கிளைமாக்சு, 583ஆவது கிளையாக மோகனூா் கிளையை எம்.எம். மருத்துவமனை தலைமை அதிகாரி முட நீக்கியல் மருத்துவா் எம். சிவக்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளா் சேவையிலும், அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடா்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது.

இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 583 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமாா் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது என்றாா்.

தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்குப் பணிகள்: கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் குடமுழுக்கு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ... மேலும் பார்க்க

எட்டயபுரம் பாரதியாா் இல்ல சீரமைப்பு! பாஜக போராட்ட அறிவிப்பு: வட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வி

எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியாா் இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக எட்டயபுரம் ஒன்றிய பாஜக அறிவித்திருந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி திரேஸ்புரம் க... மேலும் பார்க்க

சாலையோரங்களில் காய்ந்த புற்களை எரிப்போா் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் காய்ந்த புற்கள் மீது தீவைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க