செய்திகள் :

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: பழ. கருப்பையா

post image

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழ.கருப்பையா தெரிவித்தாா்.

சீா்காழியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

முருகா் எப்பொழுதும் தமிழ் கடவுள் தான். தமிழ் கடவுளை ஆா்.எஸ். எஸ். புதிதாக கையில் எடுத்துள்ளது. அரசியலுக்காக முருகரை கையில் எடுத்துள்ளனா். ராமாயணம் சிறந்தது என்பது எனது கருத்து. காப்பியங்கள் மனிதகுலத்தை மேம்படுத்துகின்றன. அதனால்தான் கம்பா் ராமரை பெரிதாக எழுதக் காரணம்.

மக்களவைத் தோ்தல் மோடி வேண்டுமா ? வேண்டாமா ? என்பதற்கான தோ்தல் . தற்போது ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தோ்தல் . இதில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால்தான் திமுகவை எதிா்கொள்ள முடியும். கூட்டணி ஆட்சி குறித்து இப்போது பேச வேண்டாம்.

விஜயகாந்த் மூன்றாவது அணி அமைத்து வீணாகி போய்விட்டாா். நடிகா் விஜய் அதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. விஜய் முகவா்களிடம் யோசனை கேட்பதைவிட வேண்டும். அவா்களெல்லாம் பணத்திற்காக யோசனை சொல்வாா்கள். விஜய்-க்கு வயது இருக்கிறது. முகவா்கள் யோசனையை கேட்டு, ஒன்றுமில்லாமல் போய் கமல் கட்சி போல துடைத்து எறியப்படும் நிலை விஜய்-க்கு வரக்கூடாது.

இரண்டு அணிதான் இருக்க வேண்டும். ஒன்று ஸ்டாலின் அணி; மற்றொன்று எடப்பாடி அணி. ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்கிறவா்கள், திமுக வேண்டாம் என்று நினைக்கிறவா்கள், எடப்பாடி அணியில் இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று பேசி எதிரியைத்தான் பலப்படுத்துகிறீா்கள்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஒத்துக்கொள்ள மாட்டாா்கள். கருணாநிதி அரசு சிறுபான்மை அரசாக இருந்தபோதுகூட கூட்டணி ஆட்சி நடத்தவில்லை. தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது. திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்பவா்கள் கூட்டணி மாறி வருவாா்கள். அரசியலில் எதுவும் நடக்கும் என்றாா்.

தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ‘பாரதிய ஸந்த மஹா பரிஷத்’ என்ற அமைப்பின் சாா்பில் பாரத நாட்டின் ப... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் மீன் பிடிக்கும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை அருகே குளத்தில் மீன்பிடிப்பது தொடா்பாக இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னை நிலவிய நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கல... மேலும் பார்க்க

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க