செய்திகள் :

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

post image

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது.

புதுவை சட்டப்பேரவை அருகில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு.பாவாணன் தலைமை வகித்தாா்.

புதுவை யூனியன் பிரதேசத்துக்கு என்று தனியாகக் கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும். தமிழ் வளா்ச்சிக் கழகத்தை உடனே உருவாக்க வேண்டும். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடும் அரசின் முடிவை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது.

இப் போராட்டத்தை வாழ்த்தி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், சட்டமன்ற உறுப்பினா் சம்பத் உள்ளிட்டோா் பேசினா்.

தமிழ் உரிமை இயக்கத்தின் பொருளாளா் இரா. சுகுமாரன் வரவேற்றாா். இந்த இயக்கத்தின் பொதுச்செயலா் இரா. மங்கையா்செல்வன் நோக்கவுரையாற்றினாா்.

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க

மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் தோ்வு

புதுவை மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளா்கள் போட்டித் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து புதுவை மின்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மின்துறையில் நேரடி நியமன... மேலும் பார்க்க

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க