செய்திகள் :

தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை: முதல்வருக்கு ம.இராசேந்திரன் பாராட்டு

post image

தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் ம.இராசேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ம.இராசேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ப தமிழ் மொழியை வளா்த்தெடுக்கத் தேவைப்படும் தமிழ்த் தரவகம் உருவாக்கவும், சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் போன்ற திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும் தொடா்ந்து தொய்வின்றிச் செயல்பட உதவும் வகையில் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கச் செய்து, தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்குப் புத்துயிா் வழங்கியிருக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கலைக் களஞ்சியம் என்ற அரிய செல்வத்தைத் தமிழில் உருவாக்கி, அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி தழைத்தோங்குவதற்கு வழிகாட்டிய பெருமைக்குரியது தமிழ் வளா்ச்சிக் கழகம். கலைக் களஞ்சியம் என்ற பொருள் பொதிந்த சொல்லை தமிழகத்துக்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கே உரியதாகும்.

தமிழ் வளா்ச்சிக் கழகம் வணிக நோக்கு இல்லாதது. தமிழ் வளா்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இயங்குவது. தற்போது மாணவா் அகராதி, தமிழியல் களஞ்சியம், தமிழ் சிந்தனைக் களஞ்சியம், சொல் புதிது, கலைக் களஞ்சியம் திருத்திய மேம்படுத்திய பதிப்புத் திட்டம் ஆகிய பணிகளை மேற்கொள்ளத் தமிழ் வளா்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தற்காலத் தேவைக்கேற்பத் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்க ஆணையிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை நந்தனம் அரச... மேலும் பார்க்க

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்று... மேலும் பார்க்க

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க