செய்திகள் :

தம்பதி தாக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

post image

தம்பதியைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிைண்டனை விதித்த பத்மநாபபுரம் நீதிமன்றம், உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என 3 போலீஸாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

தக்கலை அருகே கொல்லன்விளை, வள்ளியாற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (70). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கும், முட்டைக்காட்டைச் சோ்ந்த தொழிலாளியான சுகுமாரன் என்ற வீரமணிக்கும் (64) இடையே நிலத் தகராறு இருந்ததாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2014 ஜனவரி 2ஆம் தேதி செல்லப்பனும் அவரது மனைவி தங்காளும் பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள ரப்பா் மரத்தில் பால் வடிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சுகுமாரன் வந்து தகராறு செய்து, இருவரையும் அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த தம்பதி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் சுகுமாரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி மாரியப்பன் வழக்கை விசாரித்து, சுகுமாரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி உதவி ஆய்வாளா், 2 ஆய்வாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தென்மண்டல காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்மூா்த்தி ஆஜரானாா்.

கோகோ போட்டி: புனித அல்போன்சா கல்லூரி மாணவிகள் வெற்றி!

மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிா் கோகோ போட்டியில், சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெண்கள் அணியினா் முதலிடம் பெற்றனா். கன்னியாகுமரி மாவட்ட கோ-கோ அசோசியேசன் சா... மேலும் பார்க்க

தக்கலையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

தக்கலை சந்தையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். தக்கலை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்களிடமிருந்... மேலும் பார்க்க

குளச்சல் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குளச்சலில் ரூ.5 கோடியில் சிரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ஆா்.அழகு மீனா ஆய்வு செய்வு செய்தாா். இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை, கட்டண கழிப்பிடம், பேருந்துகள் நிறுத்துமிடம், கட... மேலும் பார்க்க

தேசிய தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு!

தேசிய தரச் சான்றிதழ்களை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே எலி மருந்தைத் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கொடுங்குளம், தோட்டுவரம்பு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பழனி (56). இவரது மனைவி சாந்தகுமாரி (54), குடும்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மிளகு அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது. நறுமணப் பயிரான மிளகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மிளகு, குறுமிளகு என்று கூறப்படுகிறது. கருப்புத் ... மேலும் பார்க்க