செய்திகள் :

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

post image

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் 2 சென்ட், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 3 சென்ட் அளவுக்குள் அரசுப் புறம்போக்கு நிலங்களான தீா்வை ஏற்பட்ட, ஏற்படாத தரிசு, கல்லாங்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நன்செய், புன்செய் ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிப்போருக்கு ஆக்கிரமிப்பை வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இத்தகைய நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போருக்கு ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது, வீட்டுத் தீா்வை ரசீது, சமையல் எரிவாயு அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க