செய்திகள் :

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

post image

தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா மற்றும் தருமபுரம் ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் சுவாமிகளின் குருபூஜை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா மே 9-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மறுநாள் உற்சவ கொடி ஏற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுவாமி அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு பொதுமக்கள் சீா்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளா்க்கப்பட்டு மாங்கல்ய தாரணம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மே 19-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சுமந்து ஆதீனத்தின் நான்கு சிவம்பெருக்கும் வீதிகளைச் சுற்றிவரும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க

பிளஸ்1 தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58% தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 89.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,830 மாணவா்கள், 5,631 மாணவிகள் என மொத்தம் 10... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90% போ் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,037 மாணவா்கள், 6,112 மாணவிகள் என மொத்தம் 12,149 போ் 10-ஆம் வகுப்பு தோ்வெழ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு; உறவினா்கள் போராட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி தாலுகா கீழராதாம்பூா் கிராமத... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க