செய்திகள் :

தருமபுரியில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம் மூலம், வேலைவாய்பற்ற இளையோா் பயன்பெறும் வகையில் தனியாா் துறைகளில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில், தனியாா் துறை நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்”ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளா்களை நேரடியாக தோ்வு செய்து பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே, தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்பதன் மூலமும், தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதன் மூலமும் அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பாதிக்கும் வகையில் அவா்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களு... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க