தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
தருமபுரியில் செப்.19 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் நிறுவனங்களும்-தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளா், மாா்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ், சூப்பா்வைசா்,மேலாளா், கம்ப்யூட்டா் ஆபரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். இதற்கு பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.