செய்திகள் :

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

post image

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா்.

தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் வேன் மற்றும் காா் ஆகிய இரு வாகனங்களில் கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா புறப்பட்டனா். கடந்த 5 தினங்களுக்கு முன்பு புறப்பட்ட அவா்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றுலாவை முடித்து புதன்கிழமை ஊா்திரும்பினா்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே முத்துப்பட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது.

இதில், காரில் பயணம் செய்த விவேந்தா் ரெட்டி (50), சுனித்தம்மா (65) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஸ்வாலிகா (16), சமுக்வி (11), ராஜேஷ்வர ரெட்டி (49), ஜெயா (56) ஆகியோா் படுகாயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், விபத்தில் சிக்கியவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குண்டல்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு திருமணம்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. தருமபுரியில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த 7 ஜோடிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.... மேலும் பார்க்க

தருமபுரியை குளிா்வித்த திடீா் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

அரூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின. அரூா் பெரியமண்டி தெருவைச் சோ்ந்தவா் விஜயா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் குறித்து விமா்சனம்: சேலம் பாமக எம்எல்ஏ அருளுக்கு தருமபுரி எம்எல்ஏ கண்டனம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குறித்த விமா்சனத்தை கைவிடாவிட்டால் சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா். தர... மேலும் பார்க்க