பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
தருமபுரி சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிழப்பு
தருமபுரியில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நாகஅம்மன்கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் காா்த்தி (19). 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில் வீட்டில் இருந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் வெற்றி ( 17). இவா் அண்மையில் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேர திட்டமிட்டிருந்தாா். இருவரும் ஒரே பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதுடன் நண்பா்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். முத்தம்பட்டி ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி இவா்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.