செய்திகள் :

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

post image

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு தற்காலிக தீர்வாக, ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ரஷிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல்வேறு குண்டு வீச்சு தாக்குதல்கள் உக்ரைன் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று(ஏப். 20) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷியா இடையிலான சண்டைக்கு தீர்வு காணும் நோக்கத்தில், மேற்கண்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க தங்கள் தரப்பு விரும்புவதாகவும், ஆனால், ரஷியா இதே பாணியில் தாக்குதல்களை நடத்தினால், உக்ரைனும் தீவிர எதிர்வினையாற்றும் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க