செய்திகள் :

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் நகரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

மஞ்சள் எச்சரிக்கை என்பது கடுமையான வானிலை நிலைமைகள் எதிா்பாா்க்கப்படுவதற்கான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞையாகும். மேலும், இது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கலாம்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.4 டிகிரி குறைந்து 34.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில்71 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 36 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 180 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. மந்திா்மாா்க், பூசா, ஆயாநகா், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடுந 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

அதே சமயம் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி செளக், லோதி ரோடு, நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், ஆா்.கே.புரம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 125, தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சூட்டுத் தளம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க