செய்திகள் :

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

post image

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் ஷாலிமா் பாக் தொகுதியில் சாலை விரிவாக்கம், நோ்த்தியான நுழைவு புள்ளிகள் மற்றும் பிற தோட்டக்கலை பணிகள் உள்ளிட்ட மெகா மேம்படுத்தல் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து காவல்துறையின் உள்ளீடுகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த சாலைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

வடக்கு தில்லியில் உள்ள மங்கி பாலத்திலிருந்து மஜ்னு கா திலா வரையிலான வட்டச்சாலையின் பகுதி இரு வண்டிப் பாதைகளிலும் அதிக நெரிசலைக் கொண்டுள்ளது. வட்டச் சாலையின் முடிவில் இருந்து தொடங்கி, பைபாஸ் செங்கோட்டையை சலிம்கா் கோட்டையுடன் இணைக்கிறது. மேலும், கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி நோக்கிச் செல்லும் போக்குவரத்து பழைய பாலத்தின் கீழ் சாலைப் பகுதியில் இணைகிறது.

ஆசாத்பூா் மண்டிக்கு முன்னால் உள்ள கிராண்ட் டிரங்க் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-44 லிபாஸ்பூா் சுரங்கப்பாதை ஆகியவை இந்தப் பகுதியில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இரண்டு பிற வழித்தடங்களாகும்.

மத்திய தில்லியில் உள்ள ராணி ஜான்சி சாலை வழியாக மேலும் நகா்ந்து, அதே பெயரில் மேம்பாலம் உள்ளது. இது செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனைக்கு அருகில் தொடங்கி பிலிமிஸ்தான் சினிமா வரை செல்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் 2018- இல் நிறைவடைந்தது.

மாலை நெரிசல் நேரங்களில், மேம்பாலம் வழியாக ஐஎஸ்பிடி, சிவில் லைன்ஸ் மற்றும் பிற பகுதிகளை நோக்கிச் செல்லும் போக்குவரத்து அதிக நெரிசலை கொண்டுள்ளது. ஜான்டேவாலன் கோயிலுக்கு அருகிலுள்ள ராணி ஜான்சி சாலையுடன் இணைக்கும் பகுதி பஞ்ச்குயன் மாா்க் ஆகும். இந்தப் பகுதி மிகவும் நெரிசலானதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் திட்டம் கூறுகிறது.

வடகிழக்கு தில்லியில், தில்லி - உத்தர பிரதேச எல்லையில் சவுத்ரி சரண் சிங் மாா்க் உள்ளது. இது காஜிப்பூா் குப்பைக் கிடங்கிற்கு அருகில் தொடங்கி ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி அருகே தில்ஷாத் காா்டன் வரை செல்கிறது. இது அடையாளம் காணப்பட்ட மற்றொரு வழித்தடமாகும். இந்தச் சாலையில் இரண்டு மேம்பாலங்கள் இருந்தாலும், பேருந்துகள் இலகுரக வாகனங்களுடன் இணைவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு பகுதி புஸ்தா சாலையாகும். நீண்டகால நெரிசலைக் குறைக்கும் திட்டமாக மேம்பாலத்தைத் திட்டமிடுவதற்காக இது சமீபத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தெற்கு தில்லியில் உள்ள சாலைகளும் அடங்கும். ஐஐடி மேம்பாலத்திலிருந்து தொடங்கி மோடி மில் மேம்பாலத்திற்குச் செல்லும் வெளிப்புற வளையச் சாலையில், சாலையின் தரம் மோசமாக இருப்பதாலும், பிற சிக்கல்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொதுப்பணித்துறை கடந்த ஆண்டு இரண்டு மேம்பாலங்களின் கட்டமைப்பு தணிக்கையை மேற்கொண்டது, மேம்பாலங்கள் பழையவை மற்றும் மேற்பரப்பு குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்து மெதுவாக இருப்பதால், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது.

போக்குவரத்தை மேம்படுத்த, துறை ஏற்கெனவே அந்தப் பாதையில் சாலை மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மேம்பாலங்களை ஒன்றாக இணைக்க மேலும் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

‘அந்தேரியா மோரிலிருந்து ஆயா நகா் எல்லை (தில்லி - குருகிராம்) வரையிலான மெஹ்ரௌலி - குருகிராம் சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றொரு பகுதியாகும். இந்தச் சாலை, கணக்கெடுப்பு மற்றும் சாலை விரிவாக்கம் மற்றும் பிற நெரிசல் நீக்கப் பணிகளைத் திட்டமிடுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சஃப்தா்ஜங் மருத்துவமனையிலிருந்து தௌலா குவான் வரையிலான வட்டச் சாலை, பீக் ஹவா்ஸில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எய்ம்ஸ் லூப்பைக் கொண்டிருக்கும். சாலை விரிவாக்கத்தை மேற்கொள்வதன் மூலம் மேம்படுத்தப்படும்.

ஆா்டிஆா்-இல் இருந்து ஷிவ் மூா்த்தி கேரியேஜ்வே வரையிலான தேசிய நெடுஞ்சாலை, ஜாகிரா மேம்பாலத்திலிருந்து ரோஹ்தக் சாலை மற்றும் ஜாகிராவிலிருந்து துவாரகா மோா் வரையிலான சிவாஜி மாா்க் ஆகிய சாலைகளும் பட்டியலில் உள்ளன‘ என்று பொதுப்பணித்துறையின் போக்குவரத்து நெரிசல் நீக்கத் திட்டம் கூறுகிறது.

முதல்வரின் தொகுதியில், பிதம்பூராவிலிருந்து சிங்லாப்பூா் வரையிலான சாலையில் பொதுப்பணித்துறை சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும். சாலை அகலம் 80 அடியில் இருந்து 20 மற்றும் 40 அடியாகக் குறைகிறது. இதற்காக, ஒரு நிலத்தை ஒதுக்க தில்லி மேம்பாட்டு ஆணையத்துடன் (டிடிஏ) பொதுப்பணித்துறை பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திட்டத்தின்படி, ஷாலிமாா் பாக் தொகுதியின் நுழைவுப் புள்ளிகள் மற்றும் அடையாளப் பலகைகள் பழுதுபாா்க்கப்பட்டு வருகின்றன. மேலும், பசுமைப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க

தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எடுத்த நடவடிக்கை என்ன? பாஜக கேள்வி

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அதை மணீஷ் சிசோடியா விளக்க வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க