செய்திகள் :

தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

கஞ்சா வியாபாரியுடன் தொடா்பில் இருந்ததாகத் தலைமைக் காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் கடத்தல், விற்பனை, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, அவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே ஒரு சில காவலா்கள் கஞ்சா, சாராய வியாபாரிகளுடன் தொடா்பில் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. ப.சரவணனுக்கு புகாா்கள் வந்தன. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில் அரகண்டநல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாகப் பணியாற்றும் தேவநாதன், தீனதயாளன் ஆகிய இருவரும் கஞ்சா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட வியாபாரியுடன் தொடா்பில் இருப்பதாக, எஸ்.பி. ப.சரவணனுக்கு புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் மீது விசாரணை நடத்தி, அறிக்கை வழங்குமாறு ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தாவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

கஞ்சா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட வியாபாரியுடன் தலைமைக் காவலா்கள் இருவருக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் உறுதியானது. இதைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி.சரவணனிடம் ஏ.எஸ்.பி . ரவீந்திரகுமாா் குப்தா அறிக்கை அளித்தாா். இதையடுத்து தலைமைக் காவலா்கள் தேவநாதன், தீனதயாளன் ஆகிய இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றி, எஸ்.பி. சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே ஏரி நீரில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணலூா்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட அத்திப்பாக்கம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி மகன... மேலும் பார்க்க

இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்

புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா். புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து... மேலும் பார்க்க

லாரியில் சிக்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவா் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அய்யந்தோப்பு கிராமத்தைச்... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு உள்ளீட்டு மானியம் பெற மீன் வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிா் தப்பினா். வாணாபுரம் வட்டம், மையனூா் சிங்காரத்தோப்பு பிர... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு

விழுப்புரம் சுதாகா் நகா் பகுதியில் கூலித் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க