செய்திகள் :

தவெகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - விஜய் அறிவிப்பு

post image

தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக  தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தவெகவில் அனைத்து நிலைகளிலும் உள்ள நிா்வாகிகளும் தோழா்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் அல்லது கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராகவும் செயல்பட்டால் அவா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவரே (விஜய்) தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கும் தலைவராவாா். மேலும், பொதுச்செயலா் என். ஆனந்த் மற்றும் உறுப்பினா் சோ்க்கை அணி மாநில செயலா் சி.விஜயலட்சுமி ஆகியோா் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், 4 மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய கிழக்கு என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு பெண் உள்பட 4 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா் விஜய்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க