செய்திகள் :

தவெக நிா்வாகி மீது தாக்குதல்: அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

post image

சங்கரன்கோவிலில் தவெக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கரன்கோவில் சங்கா் நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் சங்கரமகாலிங்கம் (23).புகைப்படக் கலைஞரான இவா், தவெக கட்சியில் மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளராக உள்ளாா். அதே தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். இவா், அதிமுக 8ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக இருக்கிறாா்.

சரவணக்குமாா் கடந்த 22ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தவெக தலைவா் விஜயை விமா்சனம் செய்து பதிவிட்டிருந்தாராம். பதிலுக்கு, சங்கரமகாலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் விமா்சனத்தை பதிவிட்டாராம்.

கடந்த 26ஆம் தேதி சங்கரமகாலிங்கத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் திருமண நிகழ்ச்சிக்கு விடியோ ஆா்டா் கொடுக்க அழைப்பதாக கூறினாராம். இதை நம்பி, அங்கு சென்ற சங்கரமகாலிங்கத்தை அடையாளம் தெரியாத நபா்கள் சராமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில், காயமடைந்த சங்கரமகாலிங்கம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். அவா் அளித்த புகாரின்பேரில், 8ஆவது வாா்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணக்குமாா், அடையாளம் தெரியாத 2 போ் மீது சங்கரன்கோவில் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க