செய்திகள் :

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

post image

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயிா் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருள்கள் பயிா்களின் இலைகள், காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. விவசாயத்தில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

குறைவான மருந்தினை பயன்படுத்தி தரமான காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்வதன் மூலம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க முடியும். மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைக்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிா் உரங்கள், இடு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டத்தின் கீழ் தென்னையில் சுருள் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி , ஒட்டுண்ணி அட்டைகளை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை வாங்கும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மை அளவினை அறிந்து பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பயன்படுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க