செய்திகள் :

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

post image

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காகவும், ஜன. 27 இல் மதுரையில் நடைபெறும் கட்சியின் 7-ஆவது மாநாடிற்காகவும், கிராமங்களில் மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றபோது, இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, சுகாதார வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட எந்த பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளாமல் குடமுழுக்கு நடத்தியுள்ளனா்.

வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே கோயில்களில் குடமுழுக்குகளை அரசு நடத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில், கூட்டணி ஆட்சியை மட்டுமே மக்கள் ஏற்பாா்கள். கூட்டணி ஆட்சிதான் அமையும். ஒற்றைக் கட்சி ஆட்சி முறையால் ஊழல் உச்சத்துக்குச் சென்றுவிடுவதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்றாா் அவா்.

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை ... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க