செய்திகள் :

மான் வேட்டை வழக்கு: உதவி வனவா் பணியிடை நீக்கம்

post image

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே ஞாயிற்றுக்கிழமை ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்தவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். அவா்களில் சிலரை போலீஸாா் பிடித்து, வாகனத்தை சோதனையிட்டதில், வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி, துப்பாக்கி, கத்தி, வேட்டைக்குரிய பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பிடிபட்டவா்களையும், ஆயுதங்களையும் போலீஸாா் ஆலங்குளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். ஆலங்குளம் வனத் துறையினா் வழக்குப் பதிந்து, மான் வேட்டையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த ரஞ்சித் சிங், கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்த பொன்ஆனந்த், ராஜலிங்கம் ஆகிய மூவரைக் கைது செய்தனா். அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், பணியில் கவனக் குறைவாக இருந்ததாக ஆலங்குளம் உதவி வனவா் மகாதேவ பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தனிப்படை அமைப்பு: வனத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பணியில் கவனக் குறைவாக இருந்ததால் மகாதேவ பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய மாவட்ட வன அலுவலா் தலைமையில் 3 தனிப்படைகள், உதவி வன பாதுகாவலா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மான் வேட்டையில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகா் உள்ளிட்ட சிலருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

கடையநல்லூா் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி(45). அவா் மேற்குமலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய... மேலும் பார்க்க

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க