செய்திகள் :

தாய், மகளை தாக்கி பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

நாகை அருகே வீடு புகுந்து, தாய் மற்றும் மகளைத் தாக்கி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் முத்து. இவா் கடந்த 2024 ஜூலை மாதம் நாகை மாவட்டம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய், மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துவை கைது செய்தனா்.

நாகை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்ட முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000அபராதம் விதித்து நீதிபதி காா்த்திகா தீா்ப்பளித்தாா்.

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.50 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: ஒருவா் கைது

நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பா் கிரீஸுடன் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி பசல... மேலும் பார்க்க

கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். 10... மேலும் பார்க்க