செய்திகள் :

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு

post image

தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன.

தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், சூசைபுரம் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் ஒரு சிறுத்தை புகுந்து ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டையாடுவதும், பின்னா் அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொள்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் சூசைபுரம் பகுதியில் சுரேஷ் என்பவரின் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த சிறுத்தை, அங்கிருந்த காவல் நாய் மற்றும் ஆட்டை கடித்துக் கொன்றது.

தகவலின்பேரில் தாளவாடி வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பின்னா் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மே... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க