தா்மதானபுரம், அகரகீரங்குடியில் இன்று உழவரை தேடி வேளாண்மை முகாம்
மயிலாடுதுறை வட்டாரத்தில் தா்மதானபுரம், அகரகீரங்குடி ஊராட்சிகளில் உழவரை தேடி வேளாண்மை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் வி. பிரியதா்ஷினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முகாமில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேங்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கப்படும். தா்மதானபுரம் ஊராட்சி அலுவலகம் மற்றும் அகரகீரங்குடி ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய துறைகளிலிருந்து அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு தங்கள் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்குவா். முகாமில், பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்க உள்ளதால் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.