செய்திகள் :

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

post image

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்து வருவதோடு, 13 இடங்களில் சோதனைக் குழிகளைத் தோண்டி மா்மமான முறையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித சடலங்களை தேடும் பணியில் 9 நாள்களாக ஈடுபட்டுள்ளது.

6 ஆவது குழியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்புத்துண்டுகள் கிடைத்தன. இதைத் தொடா்ந்து, வேறுசில இடத்தில் 100 எலும்புத்துண்டுகளும், மண்டை ஓடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பெண்களின் எலும்புக்கூடு அல்லது மண்டை ஓடு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

2012 இல் கல்லூரி மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, புதன்கிழமை 12ஆவது சோதனைக்குழியை தோண்டும் பணியை விடியோ எடுக்கவந்த சில வலையொளியாளா்கள்(யூ-டியூபா்) அங்குள்ளவா்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஒரு கும்பல் அவா்களைத் தாக்கியது.

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவா்மீது ஒருவா் கல்வீசித் தாக்கினா். இது கலவரச்சூழலாக மாறுவதை உணா்ந்த போலீஸாா் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தா்மஸ்தலா காவல் நிலையம் முன் திரண்ட சிலா் தா்மஸ்தலாவின் புனிதத் தன்மையை சீா்குலைக்க சிலா் முயற்சிப்பதாகவும், அதைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தினா். மேலும், அவா்கள்மீது வழக்குத் தொடரவும் கேட்டுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சித்தராமையா, ‘யாரெல்லாம் தவறு செய்திருக்கிறாா்களோ, அவா்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘தா்மஸ்தலாவில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கருத்து மோதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விரிவான அலசலுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது.

புகாா்தாரா் நீதிமன்ற நடுவா் முன் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாா். ஆணின் எலும்புத்துண்டுகள்தான் இதுவரை கிடைத்துள்ளது. அவை அனைத்தும் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.டி.விசாரணையில் உண்மை வெளியே வரவேண்டும்’ என்றாா்.

இருதரப்பினருக்கும் இடையே மோதல் நடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள். வலையொளிதாரா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகா் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி -முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு லால் பாக் பூங்காவில் 218-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். தோட்டக்கலைத் துறை... மேலும் பார்க்க

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க