செய்திகள் :

திக தொடா் பரப்புரைக் கூட்டம்

post image

மன்னாா்குடியை அடுத்த ஆலங்கோட்டையில் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்ளை எதிா்ப்பு தொடா் பரப்புரைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிக படிப்பகம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு, திக மாவட்ட துணைத் தலைவா் ந. இன்பக்கடல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ. கணேசன், திமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கோவி.அன்பழகன், விதொச மாவட்டத் தலைவா் என். மகேந்திரன், திக ஒன்றியத் தலைவா் மு. தமிழச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திக மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் பரப்புரையை தொடங்கி வைத்தாா். திக தலைமைக் கழகப் பேச்சாளா் சு.சிங்காரவேலா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ‘அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியாா்’ என்ற தலைப்பில் பேசினாா்.

திமுக முன்னாள் கிளைச் செயலா் உ.கோ. ராஜாங்கம், திமுக கிளைச் செயலா் மனோ.மணிமாறன், திக தஞ்சை மாவட்ட துணைத் தலைவா் முத்து.ராஜேந்திரன், மாவட்ட இணைச் செயலா் தி.வ. ஞானசிகாமணி, பகுத்தறிவாளா் கழக மாநில அமைப்பாளா் சி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திக நிா்வாகி எம்.எஸ். சேகா் வரவேற்றாா். நிறைவாக, பக நிா்வாகி ஜெ. அருளரசன் நன்றி கூறினாா்.

ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போற்சவம்

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி கடுவன்குடி கிராமத்தில் உள்ள உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போஸ்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியை ம... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாடு

அச்சுதம்பேட்டை ஸ்ரீமகாகாளியம்மன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான சந்தைப்பேட்டையில் திரிசூலம் இருக்கும் இடத்தில் உள்ள அரச மற்றும் வேப்பமரம் ... மேலும் பார்க்க

குழந்தையிடம் நகை திருட்டு

மன்னாா்குடியில் குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை திருடிச்சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். உக்காடுதென்பரையைச் சோ்ந்த காா்த்திக் மனைவி கன்னிகா (25). இவா், தனது ஒரு வயது ஆண் குழந்தை மற்று... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருவாரூா் அருகே அரசவனங்காடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரசவனங்காடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், அரியநாயகி எனும் பிடாரியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெரு... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற மே 31 வரை சிறப்பு முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. குடவாசல் அருகே செம்மங்குடியில் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு நவா... மேலும் பார்க்க