செய்திகள் :

திண்டுக்கல்: இந்து முன்னணிக்கு போலீஸ் ஆதரவு? சிபிஎம் போராட்டம்; பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்குமார் மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அவர் பேசிய விஷயம் குறித்துத் தெரிந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது. உடனே வந்த தாடிகொம்பு போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.

கைகலப்பில் காயம் அடைந்த வினோத் மற்றும் சரத்குமார் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த மோதலில் போலீசார் இந்து முன்னணிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் - பெங்களூர் நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கலைந்து போகச் செய்தார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., ஆர். சச்சிதானந்தம் நேரில் வந்து நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.

தாடிகொம்பு காவல் நிலையத்திலும் இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கொடுத்தனர். அதன் பிறகு இரு தரப்பினரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்தையும் பார்ப்பதற்குக் கூடினர்.

அப்போது இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கோஷங்கள் முழங்கி தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே மீண்டும் வாக்குவாதங்கள் முற்றிக் கைகலப்பாக மாறியது.

அங்கு அடிதடி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனைத் தடியால் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது.

இரு கட்சிகள் கைகலப்பில் ஈடுபட்டது
இரு கட்சிகள் கைகலப்பில் ஈடுபட்டது

இதில் காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கல்லூரி முன்பாகப் போர்க்களம் போல் காட்சியளித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கைது செய்து கலவர இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொழுது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதங்கள் முற்றியது. இந்த களபேரங்களால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பானது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வால்பாறை 4 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை; தேடுதல் பணியில் அதிர்ச்சி... கண்ணீரில் குடும்பம்

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அண்மை காலமாகவே அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புல... மேலும் பார்க்க

குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த துரைசாமி - தனலெட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ்(22). இவர் குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதிலுள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த... மேலும் பார்க்க

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் கு... மேலும் பார்க்க

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க

தென்காசி: விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீர் மரணம்; நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் புனிதா தம்பதி. இவர்களுடைய இரண்டரை வயது ஆண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு தனது தாயுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது திட... மேலும் பார்க்க

தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் ... மேலும் பார்க்க