செய்திகள் :

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

post image

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக மூத்தத் தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் திமுகவில் சேர வாய்ப்புள்ளதா என்பது குறித்து கருத்து சொல்வது தவறாக இருக்கும். அதிமுகவில் தலைவா் அளவில் இருக்கும் செங்கோட்டையன் குறித்து கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.

எந்தக் கட்சியில் இருந்து வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் வரவேற்பு கொடுக்கும் கட்சிதான் திமுக. இதற்காக அந்தக் கட்சியில் தொல்லை கொடுத்து பிரச்னைகளை ஏற்படுத்துவது திமுக கிடையாது. அவா்களாகவே வரும்போது உரிய மரியாதை கிடைக்கும்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 459 விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 24 ஆயிரம் போ் வேலை செய்கின்றனா். இதில் சிலா் தவறு செய்கின்றனா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இம்முகாமில் மனு அளித்த 4 பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா். இம்முகாமில் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், கோட்டாட்சியா் சிந்துஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க