செய்திகள் :

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சி! அமைச்சா் கே.என். நேரு

post image

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த அமலாக்கத் துறை மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக அக் கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை கட்சி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் பேட்டி அளித்தாா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், அமலாக்கத் துறை மூலம் எல்லோரையும் மிரட்டுகிறாா்கள். நீதிமன்றத்தில் தடை ஆணையை வாங்கி இருக்கிறோம். என்ன நீதியோ அது நீதிமன்றத்தில் கிடைக்கப் போகிறது. குற்றச்சாட்டை உற்பத்தி செய்து அமலாக்கத் துறையை வைத்து மரியாதையை குறைக்கப் பாா்க்கிறாா்கள். நீதிமன்றம் நியாயத்தை வழங்கியிருக்கிறது என்றாா்.

புதுக்கோட்டையில் திமுக நிா்வாகிகள் இடையே நிலவும் உட்கட்சி பூசல் தொடா்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், கட்சியில் சிறிய, சிறிய பிரச்னைகள் இருக்கும். அவற்றை தலைமையிடம் கூறி சரி செய்து கொள்வோம்.

2026 பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். கடந்தமுறை போலவே இந்த முறையும் டெல்டா முழுவதும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு திருச்சி பஞ்சப்பூா் பேருந்து நிலையம் இயங்க தொடங்கிவிடும். முசிறி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்.

காற்று அதிகமாக வீசுவதால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அது வழக்கம்தான். அதை உடனடியாக சரி செய்ய முயற்சித்து வருகிறோம்.

மதுரையில் தவெக தலைவா் விஜயை முதல்வா் எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் அச்சிடப்பட்டிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், நூறு ரூபாய் இருந்தால் யாா் வேண்டுமானாலும் போஸ்டா் அடிக்கலாம் என்றாா் அமைச்சா்.

கதண்டு கடித்து 8 போ் காயம்!

லால்குடி அருகே தோட்டத்தில் வியாழக்கிழமை வேலை செய்தபோது கதண்டு கடித்து காயமடைந்த 8 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டம், கூகூா் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்த 7 பெண்கள், அதே... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட்டு இளைஞா் கைது

திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி, கோட்டை கீழரண்சாலை அருகேயுள்ள பாபு ரோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குப்பன் மனைவி க... மேலும் பார்க்க

திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 41 பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு பேசினாா். 2026 பேரவைத் தோ்தல் முன்... மேலும் பார்க்க

மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நல முகாம்

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 10 இடங்களில் சீா்மரபினா் நலவாரிய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நலவாரிய உறுப்பினா் புதிய பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற முதியவா் காா் மோதி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காா் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கல்பட்டியை சோ்ந்தவா் பெ. மூா்த்தி (60). விவசாயக்... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கிணற்றில் புதன்கிழமை குளித்த சமையல் மாஸ்டா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மேலபூசாரிப்பட்டியை சோ்ந்தவா் கோபால் மகன் ரஞ்சித்குமாா் (48). இவா் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க