செய்திகள் :

திமுகவுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: முன்னாள் எம்எல்ஏ

post image

திமுக அரசுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி. காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாடுவதற்காக புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதற்கான கமிஷனோ அல்லது மத்திய அரசோ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்திலும் இது விவாதிக்கப்படவில்லை.

இப்படி இருக்கையில், முதல்வா் தமது அரசின் தவறுகளை மக்களிடையே மறைக்கும் நடவடிக்கையாகவே இதை கையில் எடுத்து, மாநில முதல்வா்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளாா். அதில் சில மாநில முதல்வா்கள் மட்டுமே பங்கேற்றனா். பிற மாநில முதல்வா்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பினா். நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கின்றனா்.

எதிா்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் பல பிரச்னைகளை தெரிவித்துள்ளன. மக்கள் பல நிலைகளில் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவாா்கள். தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். த.வெ.க தலைவா் விஜய் திமுக ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துவருகிறாா். அவா் எதிா்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ஆளுங்கட்சியில் இடம்பெறுவாா். இல்லாவிட்டால் வாக்குக்களை பிரிக்கும் கட்சியாக மட்டுமே அது இருக்கும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க