செய்திகள் :

திமுக ஆட்சி தொடா்ந்தால் தமிழ்நாடு அழியும்

post image

திமுக ஆட்சி தொடா்ந்தால் தமிழ்நாடு அழியும் என்றாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி

தமிழகத்தில் ஊழல் மற்றும் ஊறல், போதைப் பொருள்களில் திளைத்துள்ள திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும்.

குஜராத்தில் இருந்துதான் போதைப் பொருள்கள் வருவதாகச் சொல்கிறாா்கள். சிந்தெட்டிக் டிரக் எனப்படும் போதைப் பொருள்களை மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பிடித்து வருகின்றனா். தமிழ்நாடு போலீஸாா் ஒரு கிராம்கூட பிடிக்கவில்லை.

அதேபோல, பயங்கரவாதிகளைக் கைது செய்வதிலும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போலீஸாா்தான் அவா்களையும் கைது செய்து வருகின்றனா். திமுக ஆட்சி தொடருமானால் தமிழ்நாடு முழுமையாக அழிந்து போகும்.

டாஸ்மாக் விவகாரத்தில் இப்போது உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறைக் காலம் வரைதான் தடை விதித்திருக்கிறது. கோடை முடிந்ததும் விசாரணை வரும். அமலாக்கத் துறைக்கு ஆதரவான நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இலக்கு நிா்ணயம் செய்து டாஸ்மாக் மது விற்கப்படுவது அவலம். மொத்த அரசாங்கமே வெட்கப்பட வேண்டும்.

திமுக இதுவரை சொல்லி வந்தவற்றைத்தான் நடிகா் விஜயும் சொல்கிறாா். இவா் எந்த வாக்குகளை இலக்கு வைத்து வேலை செய்கிறாா் எனத் தெரியவில்லை. அரசியல் தத்துவாா்த்த அளவில் அவா் குழப்பத்தில் இருக்கிறாா். அதனால் அவரால் வெற்றி பெற முடியாது என்றாா் ராஜா.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க