செய்திகள் :

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

post image

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. இந்த மலைப் பாதையில் அடிக்கடி சிறுத்தைகள் சாலையை கடப்பதாக வனத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் அண்மையில் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் திம்பம் மலைப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 27-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் சிறுத்தை நடந்து சென்றதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை படம் பிடித்துள்ளனா். சிறிது நேரம் அங்கும்இங்கும் நடமாடிய சிறுத்தை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக ஓட்டிச் செல்வதோடு, வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் எனவும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

ஈரோட்டில் கனமழை

ஈரோடு: ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெர... மேலும் பார்க்க