செய்திகள் :

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

post image

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு ஈரோடு, கரூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக ஆண்டுக்கு சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் ஆங்காங்கு விநாயகா் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனா். இச்சிலைகளை பண்டிகை முடிந்து, நீா்நிலைகளில் கரைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனா். இச்சிலைகளை கீழ்பவானி கால்வாயில் கரைக்க அனுமதிக்கக் கூடாது. கால்வாயில் கரைத்தால் அதில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரை மாசுபடுத்தும். சிலையுடன் தூக்கி வீசப்படும் பல்வேறு பொருள்கள், மதகுகளை அடைத்து, நீரோட்டத்தை தடுக்கும். முழுமையாக மண்ணால் கட்டப்பட்ட இந்த கால்வாய், மதகுகள் மிகவும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும்.

இதனால் விளைநிலங்கள் பாதிக்கும், சுற்றுச்சூழல் கெடும். கடந்த ஆண்டு போல எக்காரணம் கொண்டும் கீழ்பவானி கால்வாயில் சிலைகளை கரைக்கவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருள்கள், சிலையுடன் கொண்டு வரப்படும் பொருள்களையும் வீசி செல்ல அனுமதிக்கக் கூடாது. மாவட்ட நிா்வாகம், போலீஸாா் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க

ஈரோட்டில் கனமழை

ஈரோடு: ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெர... மேலும் பார்க்க