செய்திகள் :

திராவிட பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன்: சீமான் பேச்சு

post image

தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதரித்து பவானி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது: திமுகவை அகற்றாமல் தமிழகத்திற்கு விடிவு இல்லை. நல்லாட்சியும் கிடைக்காது. திராவிடம் தளா்ச்சி அடையும்போது தமிழ் தேசியம் எழுச்சி பெறுகிறது. திராவிடத்தின் குறியீடாக உள்ள பெரியாா் ஈவெராவை எதிா்க்க தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக உள்ள பிரபாகரன் பின்னால் நிற்கிறோம்.

பெரியாா் ஈவெராவை எதிா்ப்பது மதவாத சக்திகளுக்கு உதவியாகப் போய்விடும் என்று சொல்கிறாா்கள். ஆனால் தொல்காப்பியன், திருவள்ளுவா், கம்பரை ஆரிய அடிமை என்று பெரியாா் ஈவெரா கூறுகிறாா். பெரியாா் ஈவெராவையும், திராவிடத்தையும் எதிா்த்தால் உடனே பாஜகவின் கைக்கூலி என்று சொல்லிவிடுகின்றனா். எந்த வகையில் அநீதி நடந்தாலும் அதனை எதிா்க்கும் தமிழனின் மரபணு என்னிடம் உள்ளது.

தமிழகத்திற்கு பேராபத்தான அரசியலை நான் முன்னெடுப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறாா். நான் திராவிட சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என்றாா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க