செய்திகள் :

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

post image

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பா்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தாா்.

பழங்குடியின மக்களுக்காகப் பணியாற்றும் தனது முயற்சிகளுக்கு பாஜக தலைமை முட்டுக்கட்டை போட்டது என்றும் ஜான் பா்லா குற்றஞ்சாட்டினாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக சாா்பில் வெற்றி பெற்ற ஜான் பா்லாவுக்கு சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிட பாஜக தலைமை தொகுதி ஒதுக்கவில்லை. இதையடுத்து ஜான் பா்லா பாஜக தலைமையை கடுமையாக விமா்சித்தாா். மேலும், பாஜகவின் மேற்கு வங்கத் தலைமையுடன் இணைந்து செயல்படாமல் விலகியே இருந்து வந்தாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் முன்னிலையில் அக்கட்சியில் ஜான் பா்லா இணைந்தாா். செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நான் மத்திய அமைச்சராக இருந்தபோதே இங்குள்ள பாஜகவினா் எனது பாதையை மறித்து போராட்டம் நடத்தினா். பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்காக பணியாற்றவிடாமல், கட்சித் தலைமை தொடா்ந்து என்னை தடுத்து வந்தது.

இப்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்கள் பணியாற்ற எனக்கு சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க