செய்திகள் :

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

post image

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வியாழக்கிழமை மாலை திரிபுரேஸ்வரி கோயிலுக்குச் சென்றார். பிறகு, சிறுமியை காரில் உதய்பூர் ரயில் நிலையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். வழியில், ஓடும் காரில் சிறுமியுடன் வந்த இருவரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மூவரும் இரவு 10 மணியளவில் திரும்பி வந்தபோது உதய்பூர் துணைப்பிரிவில் உள்ள கக்ராபன் சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை கூறியுள்ளார். பின்னர் அவர்கள் விசாரணைக்காக ஆர்.கே. பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரை தடயவியல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Agartala, A girl was gangraped on a moving vehicle by two of her companions near Udaipur railway station in Tripura's Gomati district, police claimed on Friday.

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடனான விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது மற்றும் பய... மேலும் பார்க்க

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமனற்ம் அனுமதி வழங்கியு... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் ... மேலும் பார்க்க

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க

ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார். ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீர... மேலும் பார்க்க