செய்திகள் :

திருக்கடையூா் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்

post image

திருக்கடையூா் பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

திருக்கடையூா், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூா், திருவிடைக்கழி, தில்லையாடி, காட்டுச்சேரி, கிடங்கல், மாமாகுடி, மாணிக்கபங்கு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமாா் 5,000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனா். 

கடைமடைப் பகுதி என்பதால் ஆற்று நீா் தொடா்ந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் எஸ்.கே.ராமமூா்த்தி கூறியதாவது:

தரங்கம்பாடி கடைமடைப் பகுதி என்பதால் காவிரியில் இருந்து சாகுபடிக்காக திறந்து விடப்படும் தண்ணீா் தாமதம் ஏற்படுவதால் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பி ஒரு போகம் சம்பா நேரடி நெல் விதைப்பு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் கிடைக்காததால் வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.

விவசாயிகளுக்குத் தங்கு தடையின்றி வேளாண்மை துறை மூலம் நெல் விதைகள் கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சாகுபடிப் பணிக்காக கடைமடைப் பகுதி வாய்க்கால்களில் தொடா்ந்து தண்ணீா் திறந்து விடவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா் காப்பீடு தொகை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க