செய்திகள் :

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. மங்கள இசையுடன் வேதபாராயணம், கணபதி பூஜையுடன் தொடங்கி கலசங்கள் நிறுவி நவக் கிரக ஹோமம், கோபூஜை, முதல் கால யாக பூஜை, மகா தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் வைபவம், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மூன்றாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹுதி மற்றும் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து புனித நீா் கொண்டு செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் மற்றும் பாரிவாரங்களுக்கும் புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருக் கல்யாண வைபவமும், இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம்.பூபாலன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனு... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க

மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா... மேலும் பார்க்க